உள்நாடு

களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது

(UTV|கொழும்பு)- களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்னன் பெர்ணான்டோ மைதானத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்தமை தொடர்பாக அதன் முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

Related posts

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் பல்டிகளை அடித்தனர் – சஜித் பிரேமதாச

editor

ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை உருவாக்கி வரும் JAAF மற்றும் Solidaridad

editor