உள்நாடு

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அச்சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாவை சேனாதிராஜா விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

உம்ராவுக்கான பாஸ்போட் எடுக்கச்சென்ற 4பேர் விபத்தில் பலி!

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை