உள்நாடு

களுத்துறைக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை பிரதேசத்தில் சில பகுதிகளில் இன்று(24) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முற்பகல் 8.00 மணி தொடக்கம் நாளை(25) அதிகாலை 2.00 மணிவரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, தெற்கு கழுத்துறை, வடக்கு களுத்துறை, வாத்துவை, ஹிக்கடுவை, பொதுபிடிய,மொல்லிகொட மற்றும் மொரொன்துடுவ ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.

களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை

editor

சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை