உள்நாடு

கலந்துரையாடலைத் தொடர்ந்து மின்சார சபை ஊழியர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக இந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

மன்னிக்கவும், நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது – நிலந்தி கொட்டஹச்சி எம்.பி

editor

எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை