சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால், கடந்த 7ஆம் திகதி கற்பிட்டி A7 வீதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 643 கிலோகிராம் பீடி இலைகளும், அவற்றை ஏற்றிச் சென்ற ஒரு கெப் வண்டியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒக்டோபர் 07ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, கல்பிட்டி நகர எல்லைக்குள் உள்ள A7 பாதையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி சோதனை செய்யப்பட்டபோதே அவை கண்டுப்பிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது 37 மற்றும் 41 வயதுடைய, கற்பிட்டி – தலவில மற்றும் பேலவிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கெப் வண்டி மற்றும் பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள விசேடப் பிரிவிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.