உள்நாடு

கரையோர ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – ரயில்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு தொடர் சிறப்பு அறிவுரைகளை ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்தார்.

அதன்படி, குறுகிய பயண சேவை ரயில்கள் சீரற்ற முறையில் சோதனை செய்யப்பட உள்ளன. தொலைதூர சேவை ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபகாலமாக ரயில்களில் பணம் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளதை அடுத்து புதிய பாதுகாப்பு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், கடலோர ரயில்வேயின் ரயில் நேர அட்டவணை நாளை (13) முதல் மாற்றப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தின்படி நாளை முதல் கடலோரப் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் 10 நிமிடம் முன்னதாகவே இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை