உள்நாடு

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல தடை விதித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 18 ஆம் திகதி அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன மற்றும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், இந்த முறைப்பாடு தொடர்பில் மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தனர்.

Related posts

ஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ரணிலிடமிருந்து நல்ல செய்தி

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் – நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன்