உள்நாடு

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரம்

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை மற்றும் மல்வத்து ஓயா ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன.

மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கலா வாவி, நாச்சதுவ, கண்டி வாவி உள்ளிட்ட பெரிய குளங்களிலிருந்தும், பல சிறிய குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் மல்வத்து ஓயாவில் தேங்கியுள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது

Related posts

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 62,677 பேர் கைது