அரசியல்உள்நாடு

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அமைப்பாளர் நியமனம்

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம் (08) நியமிக்கப்பட்டுள்ளார்.

இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம் (08) கூடிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை பூர்த்திசெய்வதற்காக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இ.தொ.கா தலைமைகளால் பூர்த்தி செய்துள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.

மேற்படி இந்நியமனமானது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor