கண்டி பெரஹெராவில் பங்கேற்ற யானை கையாளுபவரின் உடல் இன்று (31) காலை கண்டி குளக்கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கண்டியில் உள்ள கதிர்காம தேவாலாவில் நடைபெறும் பெரஹெராவில் பங்கேற்க வந்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அச்சலங்கா என்பவரே உயிரிழந்துள்ளார்.
யானையின் பிரதான கையாளுபவரின் உதவியாளராக அவர் பணியாற்றி வந்தார்.
மேலும் இது குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.