உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கேனுடன் சிக்கிய இந்திய பெண்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) காலை 65,760,000 ரூபா மதிப்புள்ள கொக்கேன் போதைப்பொருளை கொண்டு சென்ற இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சந்தேகநபர் இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயது சமையல்காரர் என்று கூறப்படுகிறது.

கடவுச்சீட்டினைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் இதற்கு முன்பு மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்திருப்பது தெரியவந்துள்ளது.

அவள் இந்தியாவின் சென்னையில் இருந்து அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதோடு, அவர் கொண்டு வந்த பயணப் பைக்குள் பொலித்தீன் பொதிகளில் சுற்றப்பட்டு 1 கிலோகிராம் 644 கிராம் கொக்கேன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கையிருப்பை பெறுவதற்கு தயாராக இருந்த இந்நாட்டு உரிமையாளர், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் மாலபே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்

ராஜபக்ஸக்கள் தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரசாங்க பங்களாவிற்கு குடிபெயர்வு