உள்நாடு

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் பயணிப்போருக்கு மறு அறிவித்தல் வரையிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி