உள்நாடு

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுக்கான கட்டணத்தை தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் உட்பட ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் எமது நிலைப்பாட்டை விளக்கப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில், அமைச்சர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினருடன், அனைத்து சங்கங்களும் இணைந்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்துக்கும் இடையே விசேட சந்திப்பு

editor

நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு சிறைத்தண்டனை

editor