அரசியல்உள்நாடு

கட்சியை முடக்குவதற்கு சதி – எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள் – மாவை சேனாதிராஜா

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

“குறுக்கு வழியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தவர்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அவர்களின் சுயநல நடவடிக்கைகளால்தான் எமது கட்சி பலவீனமானது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்க வேண்டும் என்று தென்னிலங்கை விரும்பியது.

ஆனால், நானும் முன்னாள் தலைவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியைப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாதுகாத்தோம்.

இதெல்லாம் எமது கட்சியைத் தற்போது முடக்க முயலும் சூழ்ச்சிக்காரர்களுக்கு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழரசுக் கட்சிக்குள் வந்து அரசியல் முகவரி தேடிய இந்தச் சூழ்ச்சிக்காரர்கள், கட்சியை முடக்க முயல்வது அசிங்கமானது. அவர்கள் நன்றி மறந்தவர்கள்.

அவர்களின் எண்ணம் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண்கலங்கிய மாவை சேனாதிராஜா – அனுதாப அறிக்கையில் ரிஷாட் பதியுதீன் எம்.பி

editor

சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் – விஜேதாச ராஜபக் ஷ

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.

editor