சூடான செய்திகள் 1

கடும் வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதுடன், வவுனியா, அநுராதபுரம், கட்டுகஸ்தொட்டை, மஹா இலுப்பள்ளம ஆகிய பகுதிகளில் பகல் வேளையில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அநுராதபுரம், கொழும்பு, இரத்மலானை பகுதிகளில் இரவு வேளைகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்