உள்நாடு

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor

ஜக்கிய மக்கள் சக்தியில் ஒற்றுமை கிடையாது – அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப்

editor

 மாணவியின்( காதலியின்) அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலன் கைது!