உள்நாடு

கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சகல மாகாணங்களிலும் வழமை போன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்

தொழில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் தொடருந்து சேவைகள் இடம்பெறமாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகளின் நலன்கருதி மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் தொடர்பில் எச்சரிக்கை

editor

சம்பந்தன் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி