உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

பஹல கடுகண்ணாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது.

Related posts

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு