உள்நாடு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றிருந்து பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”

மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

editor