உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,083 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,523 ஆக காணப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு

விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ரொஷான் மஹாநாம

editor

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு