உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 52,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

editor

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!