உள்நாடு

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

(UTV | கொழும்பு) –     ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சா ஏற்றுமதித் தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் ஹரினி வாழ்த்து

editor

மூன்றாவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

editor