உள்நாடுவகைப்படுத்தப்படாத

கஞ்சாவை பயிரிடும் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் திலும் அமுனுகம

(UTV | கொழும்பு) –

முதலீட்டு வலயத்துக்குள் மாத்திரம் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றின் அனுமதியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளது.

முதலீட்டுச் சபை தலைமையகத்தில் நேற்றையதினம் (26.05.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னோடித் திட்டம் கட்டுநாயக்க வலயத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் முன்னோடி திட்டத்தை இறுதி செய்வதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்தில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் கஞ்சாவை வளர்த்து அதிலிருந்து ஒரு பொருளைத் தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அது நாட்டுக்கு வருமானமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐதேக முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்

“மங்களவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு” – ACMC

யாழ்குடா நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி – சாணக்கியன் எம்.பி

editor