உள்நாடு

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!

(UTV | கொழும்பு) –  “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!

மருதங்கேணி பொலிஸ்நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்குமூலம் வழங்கும்வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்று சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கியுள்ளனர். அவரால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்று கூறியதன் காரணமாக பொலிசாரே அதனை வாசித்துக் காட்டியும் உள்ளனர்.

அதன் பிரகாரம் கஜேந்திரகுமார் எம்.பி. மருதங்கேணி பொலிஸ்நிலையத்தில் ஆஜராகும்வரை நாட்டை விட்டு தடைவிதிக்ககோரும் வேண்டுகோளை கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விடுத்துள்ளனர். அவர் பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலத்தை பதிவுசெய்யும் வரை வெளிநாட்டிற்கு செல்வதற்கு அனுமதியளிக்கவேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை முழுவதும் நாளை முதல் இலவச ஷொப்பின் பேக் வழங்கப்படாது

editor

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

தங்கத்தின் விலை- இன்றைய நிலவரம்