உள்நாடு

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்

(UTV|கொழும்பு) – ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

editor

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு

பெண் ஒருவர் எரித்துக் கொலை – மகன், மகள், மருமகள் கைது

editor