உள்நாடுவிசேட செய்திகள்

ஓட்டமாவடி, மாஞ்சோலை நபர் குவைத்தில் மரணம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய அலியார் ஹயாத்து முகம்மட் என்பவர் (18) செவ்வாய்க்கிழமை குவைத் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து குவைத் – உம்முல் ஹைமா எனும் பகுதியில் வேலைக்குச் சென்ற நபரே மரணமடைந்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக குவைத் நாட்டிலிருந்து தகவல் கிடைத்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபரின் ஜனாஸாவை குவைத் நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor