உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் லொரி குடைசாய்ந்து விபத்து!

சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் வைத்து இன்று (28) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கொழுப்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற லொரியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொரியின் டயர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் லொரியை ஒழுங்கு படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது

“அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வழங்கியமை தமிழர்கள் அனாதையாக்கப்பட கூடாதென்பதற்கே” முன்னாள் MP கோடீஸ்வரன்.