கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதி, மீராவோடை பிரதான வீதி ஓரங்களில் காணப்பட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய மரக்கிளை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸின் வழிகாட்டலில் வெட்டி அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்