உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இன்று (4) பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படை அணி, பேன்ட் வாத்திய குழு, சென்ட் ஜோர்ன்ட்ஸ் அம்புயூலன்ஸ் முதலுதவி படை அணி, சென்ட் ஜோர்ன்ட்ஸ் கிட்டி, சாரணர் குழு, சுற்றாடல் முன்னோடி கழக அணியினர் உள்ளிட்ட 41 குழுவினர் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து நடைபவனியாக ஓட்டமாவடி தேசிய பாடசாலையை வந்தடைந்தனர்.

அத்துடன், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஆகியை இணைந்து மீனவத் தொழிலை முன்னிலைப்படுத்தி மீனவப் படகினை சுமந்த ஊர்தியும் பவனி வந்தது.

அதேபோன்று, ஓட்டமாவடி ஐக்கிய தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் புராதான பொருட்களை காட்சிப்படுத்தி வாகன ஊர்தியும் பவனி வந்தது.

இந்நிகழ்வில், வரவேற்புரையினை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் நிகழ்த்தினார். அத்துடன், இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரூல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

சர்வமத தலைவர்களின் உரைகள் இடம்பெற்ற இந்நிகழ்வில், இன மத ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் வகையிலான மாணவர்கள் நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், இறுதியாக நன்றியுரையினை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் நன்றியுரையினை நிகழ்த்தினார்.

-ஓட்டமாவடி நிருபர் எச். எம். எம். பர்ஸான்

Related posts

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

பிள்ளையான் கைது – காரணம் வெளியானது

editor

நமது உன்னத நாட்டை உயிரை விடவும் மேலானதாக பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor