உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பெண்னொருவரின் சடலம் மீட்பு!

தனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை வேளையில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம் பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீனா இலங்கைக்கு வழங்கிய அரிசி அரிசித் தொகை அடுத்த வாரம் நாட்டுக்கு