உள்நாடுவணிகம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான விதிமுறைகளின் கீழ் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரமுடியும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது.

இதேவேளை, நாட்டிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிங்கப்பூர் -இலங்கை இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம்

ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டிற்கு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம்