உள்நாடு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ : நீட்டித்த அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலத்தை நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி செயலணியின் செல்லுபடியாகும் காலம் நேற்றுடன் நிறைவடையவிருந்தது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த செயலணியின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ஜனாதிபதி செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதும் நிபுணர்கள் சபையின் கருத்துகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயலணியின் பணிகளை பொருத்தமான செயற்பாட்டுத் திட்டமொன்றினுள் வினைத்திறனாக மேற்கொண்டு முடிவுறுத்துவதற்காகச் அதன் காலத்தை நீட்டிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

editor

SJB ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு வீதிகள் முடங்கும் நிலை

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு