உள்நாடு

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரிய – அதிபர்களது தொழிற்சங்கங்கள் இடையே இன்று காலை(10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இத்துடன் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர்

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை