உள்நாடு

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – குறைந்த கல்விதகைமையுடைய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பல்துறை அபிவிருத்தி செயல்திறன் திணைக்கனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அநத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட தொழிலின் அடிப்படையில் 6 மாதங்கள் தொழில் பயிற்சி வழங்கப்படும் என்பதோடு குறித்த காலப்பகுதிகள்குள் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி – கைது செய்யப்பட்ட சாரதிகள்