உள்நாடு

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பொதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது,
நபரிடமிருந்து 15 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

47 வயதுடைய இச்சந்தேகநபர், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

நிந்தவூர் பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம் – ஆசிரியர் பொலிஸில் சரண்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி