உள்நாடு

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

(UTV | கொழும்பு) –  இன்று(12) காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று (12) இடம்பெறவுள்ளது.

அத்துடன், மதியபோசன இடைவேளை இன்றி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இன்றைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் நாளை(13) முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறும்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை 19 நாட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம்

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.