விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் – மெத்யூ ஹேய்டன்

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு வீரர்கள் அற்ற நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹேய்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்

மேலும் தெரிவிக்கையில்,  விளையாட்டு வீரர்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், போட்டிகளை நடத்துவதற்கு கொழும்பு நகரம் சிறந்த தன்மையை கொண்டுள்ளதுடன், இப்படியான போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற மூன்று நான்கு சர்வதேச விளையாட்டு மைதானங்கள் உள்ளதாகவும் மெத்யூ ஹேய்டன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்வுக் குழுவினால் தலைமையில் மாற்றம்?

இலங்கையினை வௌ்ளையடிப்பு செய்தது இந்தியா

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு