உள்நாடு

ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – இன்று(14) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்

உங்கள் கொட்டத்தை அடக்க போகிறோம் – தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் – இருவர் படுகாயம்

editor

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!