அரசியல் ரீதியாகப் பிரிந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையே மீண்டும் இணைவதற்கான உயர் மட்ட உள் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தீர்மானித்துள்ளார்.
நேற்று (20) அவர் வெளியிட்டுள்ள ஒரு விசேட அறிக்கையில், கட்சிக்குள் உள்ள “உள் பிரச்சினை” காரணமாக இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார்.
அவர் குறிப்பாக பிரச்சினைகளைப் பட்டியல் இடவில்லை என்றாலும், இந்த முடிவுக்கும் மேற்கூறிய இரு கட்சிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தைகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடனான கருத்து மோதல்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.
எனவே, இரு கட்சிகளின் மறு ஒருங்கிணைப்பு என்பது ஸ்தாபக உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையே வலுவான கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும் ஒரு விடயமாகும்.
குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைமையின் கீழ் மீண்டும் அரசியலில் நுழைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில பிரிவுகளுக்குள் கடுமையான எதிர்ப்பு உள்ளது என்பது இரகசியமல்ல.
இந்தச் சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் விலகல், இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராகக் கட்சிக்குள் இருந்து வரும் எதிர்ப்பின் முதல் பொது அறிகுறியாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன.