அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இந்தப் பின்னணியில், தொகுதியில் தோல்வியடைந்த மேயர் வேட்பாளர், மேயர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று (01) ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கட்சியின் கொழும்பு மேயர் வேட்பாளராக இருப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் ருவைஸ் ஹனிபாவுக்கு வாய்ப்புக்க கிடைக்காது என்பது தெளிவாகியது.

எனினும், மேயர் பதவிக்கு ரிசா சாரூக்கின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ரிசா சாரூக்கின் பெயரை நாளை (03) ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல வருட அனுபவமுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினரான அவர், இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது