அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துகோரள இன்று (10) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வு சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்பது விசேட அம்சமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க மற்றும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

editor