சூடான செய்திகள் 1

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு…

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்