உள்நாடு

ஏப்ரல் 12-14ம் திகதிகளில் கலன்கள்,பீப்பாய்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை குறைக்கும் நோக்கில் எதிர்வரும் 12,13, 14 ஆம் திகதிகளில் கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் வழங்குவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை இவ்வாறு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் 14 வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சேவைகள் ஆரம்பம்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – கெஹலிய மீது குற்றச்சாட்டு