உள்நாடு

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கம்மன்பிலவின் கூற்றுப்படி, இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட எவரும் ஜனாதிபதி உட்பட நாட்டில் எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது என்று இந்தத் திருத்தம் தடை செய்கிறது.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பதவிக்கு வந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிப்படைத் தன்மையின்றி செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 22வது திருத்தச் சட்டம் குறித்து கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதியரசர்கள் கூட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்ற பதவியை ஏற்க முடியாது.

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் – விசாரணை நடத்த விசேட குழுக்கள்

editor

மாகாண சபை முறைமையை அரசு திட்டமிட்டு பலவீனமாக்குகிறது – சாணக்கியன் எம்.பி

editor