உள்நாடு

“எரிபொருள் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் காரணமல்ல”

(UTV | கொழும்பு) – அரசின் தவறான தீர்மானங்களினால் எரிபொருளுக்கு தவறான விலை நிர்ணயம் செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்நியச் செலாவணியை முறையற்ற முறையில் நிர்வகிப்பது, எரிபொருளுக்கு அதிக வரி விதிப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைக்காதது போன்ற காரணங்களே இதற்குக் காரணம் என்றார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

“..இலங்கை வரலாற்றில் அதிகூடிய எரிபொருள் விலை உயர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் விலைகள் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பதற்கு உலகச் சந்தையில் விலை உயர்வு மட்டும் காரணம் அல்ல. வேறு பல காரணிகள் பங்களித்தன. அந்நியச் செலாவணியை முறையற்ற மேலாண்மையால் ஓராண்டுக்கும் மேலாக செயற்கையாகப் பதுக்கி வைத்திருந்ததால் ரூபாயின் மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைய நேர்ந்ததே முக்கியக் காரணம்.

எரிபொருளுக்கான வரி மூலம் அரசாங்கம் நாளொன்றுக்கு 750 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகிறது. இந்தச் சுமையை மக்கள் மீது திணிப்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, இந்தச் சுமையில் ஒரு பங்கினை அரசாங்கமும் ஏற்றிருக்கலாம்..”

Related posts

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

editor

தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரிய கடிதத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!

கம்பளை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor