வகைப்படுத்தப்படாத

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

(UTV|COLOMBO)- திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட எயார் – இந்தியா விமானம், இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த இந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசியதை அடுத்து, குறித்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், 130 பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை