விளையாட்டு

என்னுடைய சிறிய பங்களிப்பு கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது – ரகானே

(UTV|இந்தியா ) –  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை தலைவரான ரகானே இந்தியா பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி, தன்னுடைய சிறிய பங்களிப்பு எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர நிவாரணம் வழங்கி உதவி செய்யலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ 51 கோடி ரூபாய் அளித்துள்ளது சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் தலைவரான ரகானே 10 லட்சம் வழங்குகிறார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இல்லை

இலங்கையை வீழ்த்தியது ஆஸி

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி