சூடான செய்திகள் 1

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, தற்போது கரையோர மார்க்கமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து ரயில்களும் பெலியத்த வரை பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பெலியத்த வரையான தூரம் 26 கிலோமீற்றர்களாகும்.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் மார்க்கத்தில், கெகணதுர, பம்பரென்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களும் பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய உப ரயில் நிலையங்களும் உள்ளடங்குகின்றன.

 

 

 

 

 

 

Related posts

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் – கோட்டாபய ராஜபக்ஷ CIDயில் இருந்து வெளியேறினார்

editor

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…