உள்நாடு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை ​​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (11) உறுதி செய்திருந்தார்.

எனினும், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

“இன்றிலிருந்து எதிர்வரும் மூன்று நாள்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில் இருக்கும். எதிர்வரும் 14ஆம் திகதியன்று பயணத்தடை நீக்கப்படும்” என்றார்.

Related posts

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

editor