சூடான செய்திகள் 1

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள்

நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்-காவற்துறை உயரதிகாரி பாரளுமன்றிற்கு அழைப்பு